பாடம் படிக்காத குழந்தையை கண்டித்த மனைவி; கத்தியால் குத்திய கணவன்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:43 IST)
மகாராஷ்டிராவில் குழந்தையை கண்டித்த மனைவியை கணவனே கத்தியா குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அவினாஷ் வர்பே. இவருக்கு ஜெயஸ்ரீ என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஜெயஸ்ரீ தனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி கொடுத்துள்ளார். அப்போது குழந்தை சரியாக படிக்காததால் அதை அடித்துள்ளார். குழந்தையை அடித்ததால் ஆத்திரமடைந்த அவினாஷ், ஜெய்ஸ்ரீயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவினாஷ் கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீஸார் ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதற்குள்ளாக அவினாஷ் தானாகவே சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்