அந்தமானில் 7.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Webdunia
சனி, 2 மே 2015 (09:07 IST)
அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
 
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
அதேபோல், ஆஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதே பகுதியில் நேற்றும் ரிக்டர் அளவு கோளில் 6.7 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.