பாஜக கடந்து பத்து ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் பலமாக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் பிடிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு இணையான வெற்றியை பெற வாய்ப்பே இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் பாஜகவை வீழ்த்துவதற்கான வழியை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நான்கு வகையான இந்து வாக்காளர்கள் என்பது காந்தியவாத இந்துக்கள், அம்பேத்கரிய இந்துக்கள், கம்யூனிஸ்ட் இந்துக்கள் மற்றும் சோசலிச இந்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நான்கு வகை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியவர்களை கொண்ட கூட்டணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று அறிவித்து தெரிவித்துள்ளார்.