இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் விரைவில்...?

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:42 IST)
அமெரிக்காவை போல இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் விரைவில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொரொனாவுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு பூஸ்டராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்த தடை இருந்து வந்தது. 
 
இந்நிலையில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் இரண்டாவது டோஸ் போட்ட பிறகு 6 மாதங்கள் கழித்தே பூஸ்டர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் விரைவில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 ஆம், இந்தியாவில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது இருக்க மூன்றாவது பூஸ்டர் ஊசி போடுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்