வழக்கம்போல விமான போக்குவரத்தை தொடங்குங்க! – இந்தியாவிற்கு தலிபான் கோரிக்கை!

புதன், 29 செப்டம்பர் 2021 (13:12 IST)
இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமான சேவைகளை தொடங்குமாறு தாலிபான்கள் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்த பல நாட்டு மக்களையும் அந்தந்த நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டன. இந்நிலையில் இந்தியாவும் இந்தியர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டதுடன் ஆப்கானிஸ்தானுடனான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள தாலிபான்கள் மீண்டும் காபுலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமான போக்குவரத்தை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்