நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (14:22 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார்.  ஆனால் உண்மையில் அவர் தொட்ரந்து பென்ச்சில் உட்காரவைக்கப்படுவதால்தான் அதிருப்தியில் வெளியேறினார் என சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் நடந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. ஆனால் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாடவேண்டும் என்ற விதியை அறிவுறுத்தியும் கூட அவர் விளையாடவில்லை. இதனால் அவருக்கான ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் விளையாடிவிட்டு தற்போது ரஞ்சிக் கோப்பைக்கு தயாராகி வரும் அவர் தற்போது தன்னுடைய ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதில் “தொடர்ந்து பயணம் செய்ததால் நான் மனதளவிலும் உடலளவிலும் களைப்பாகினேன். அதனால்தான் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து விலகினேன். அப்போது என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை. அப்படி விளையாடுவதாக இருந்தால் நான் சர்வதேசப் போட்டிகளிலேயே விளையாடி இருப்பேனே?” எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்