பயிற்சியில் இருந்த வீரர்களுக்கு கம்பீர் அளித்த அட்வைஸ்… இனிமே இதுதான் அப்ரோச்சாம்!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (07:32 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு கம்பீர் ஒரு முக்கியமான ஆலோசனையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி டி 20 போட்டிகளில் இனிமேல் வீரர்கள் யாரும் தடுப்பாட்டம் ஆடவே வேண்டாம் எனவும் அதிரடியாக ஆடவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் ஷுப்மன் கில் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அதிரடிக்குப் பேர்போனவர்கள் என்பதால் கில் மட்டும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்