20,000 யூரோவுக்கு கன்னித்தன்மையை ஏலம் விட்ட கல்லூரி மாணவிகள்

செவ்வாய், 14 நவம்பர் 2017 (06:01 IST)
இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை ஏலம் விடுவது வெளிநாடுகளில் அவ்வப்போது நிகழும் சம்பவங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் டச்சு நாட்டை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் தங்களுடைய கன்னித்தன்மையை 20,000 யூரோக்களுக்கு இணையதளம் மூலம் ஏலம் விட்டுள்ளனர்.


 


டச்சுநாட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மோனிகா மற்றும் லோலா. 20 மற்றும் 18 வயதுள்ள இந்த இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு மேல்படிப்பு படிக்க ஆசை. ஆனால் கையில் பணம் இல்லை. எனவே வேறு வழியில்லாமல் தங்களுடைய கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளனர்.

20,000 யூரோ முதல்கட்ட தொகையாகவும், அதற்கு மேல் ஏலம் கேட்பவர்களுக்கு தங்கள் கன்னித்தன்மை ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் ஏலம் எடுப்பவர் தங்கள் கன்னித்தன்மையை மெடிக்கல் டெஸ்ட் செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்