தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்திற்காக, விலைப்புள்ளி சமர்ப்பித்த இரண்டு நிறுவனங்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினிக்கு ரூ.40,828 என்ற விலையில் டெல் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளது. அதேபோல், ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினிக்கு ரூ.23,385 என்ற குறைந்த விலையில் ஒப்பந்தம் சமர்ப்பித்துள்ளது.
இந்தத் திட்டம் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவும் என்றும் கருதப்படுகிறது. அரசின் இந்தத் திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.