கடும் நெருக்கடி எதிரொலி: பதவி விலக கோத்தபய ராஜபக்சே முடிவு?

புதன், 20 ஏப்ரல் 2022 (16:58 IST)
கடுமையான மக்கள் போராட்டம் காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலக கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த நெருக்கடிக்கு கோத்தபாய ராஜபக்சவின் நிர்வாக கோளாறே காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தான் செய்தது தவறு என்றாலும் பதவியிலிருந்து விலக முடியாது என்று பிடிவாதம் பிடித்த கோத்தபய ராஜபக்சே தற்போது பதவி விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிபருக்கான அதிகாரங்களை குறைக்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்