இன்று நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா – பிரார்த்தனா தோம்ரே இணை சீனாவின் ஷுய் பென்ங், ஷுஆய் சங் இணையுடன் மோதியது.
முதல் செட்டை 6க்கு7 என்ற கணக்கில் சீன இணை கைப்பற்றிய நிலையில், இரண்டாம் சுற்றில் 7க்கு 5 என்ற கணக்கில் சானியா இணை சமன் செய்தது. 3வது சுற்றில் 5க்கு7 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தி சீன இணை அதிரடி வெற்றி பெற்றது. இது இந்திய ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.