நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

Mahendran

வெள்ளி, 6 ஜூன் 2025 (10:15 IST)
நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்த ஜப்பான், அதை ஒளிபரப்பு வந்த நேரலையை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நிலவை ஆய்வு செய்வதற்காக, ஜப்பானின் தனியார் நிறுவனம் விண்கலத்தை நிலவுக்கு தரையிறக்க முயற்சியின் போது திடீரென தொடர்பை இழந்தது. இதனால் இந்த திட்டம் தோல்வியடைந்ததாக தெரிகிறது. 
 
ஐஸ் பேஸ் என்ற நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலம் அனுப்பி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, தற்போது மீண்டும் நிலவின் விண்கலத்தை தரையிறக்கும் பணியை ஐஸ் பேஸ் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 
 
தரையிருக்கும் கடைசி சில நிமிடங்களில் திடீரென விண்கலம் தொடர்பை இழந்தது. இது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விண்கலம் தரை இறங்குவதை நேரலையில் ஒளிபரப்பி வந்த நிலையில் தோல்வி அடைந்ததால், திடீரென நேரலை நிறுத்தப்பட்டது. 
 
இது குறித்து ஐஸ் பேஸ் நிறுவனம் எந்த விளக்கமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், விரைவில் இது குறித்து அறிவிப்பை இந்நிறுவனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்