யோகா தின கொண்டாட்டத்தின்போது இந்தியர்கள் மீது தாக்குதல்: மாலத்தீவில் பரபரப்பு

செவ்வாய், 21 ஜூன் 2022 (14:02 IST)
மாலத்தீவில் இன்று யோகா தின கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாலத்தீவில் இந்தியர்கள் யோகா தினத்தை கொண்டாடி வந்தனர்
 
அப்போது திடீரென மர்ம நபர்கள் யோகா தினத்தை கொண்டாடிய இந்தியர்களின் மீது தாக்குதல் செய்தனர். இது குறித்து விசாரணை செய்ய மாலத்தீவு அதிபர் உத்தரவிட்டுள்ளார்
 
இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாலத்தீவு அதிபர் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்