இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டி… இம்மானுவேல் மேக்ரான் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (16:01 IST)
பிரான்ஸின் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸின் தற்போதை அதிபராக இம்மானுவேல் மேக்ரான் இருக்கிறார். இந்நிலையில் அந்த நாட்டுக்கு வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க உள்ளது.  இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மேக்ரான் மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மக்களின் மேல் உள்ள நம்பிக்கையால் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்