ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் முக்கிய நகரம் லாகூரில் இன்று காலை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக விமான நிலையத்திற்கு அருகே உள்ள கோபால் நகர், நசீராபாத் பகுதிகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.