ஸ்டம்பால் தாக்கி கிரிக்கெட் வீரர் கொலை: வங்காளதேசத்தில் நடந்த சோகம்

Webdunia
வியாழன், 12 மே 2016 (18:57 IST)
கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டம்பால் தாக்கி 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
வங்காளதேசம் டாக்கா நகரிலுள்ள சிறுவர்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது.
 
அந்த போட்டியில் பாபுல் ஷைக்தர்(16) ஒரு அணி சார்பில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளான். விளையாட்டின் போது நோ பால் என்று நடுவருடன் பேசிக் கொண்டிருந்த ஷைக்தரை பேட்ஸமேன் ஒருவர் ஆத்திரம் அடைந்து ஸ்டம்பால் தலையில் தாக்கியுள்ளார்.
 
இதில் ஷைக்தர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உடனே அங்கு இருந்த சிறுவர்கள் ஷைக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஷைக்தர் உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை செய்த மற்றொரு சிறுவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்