மும்பையில் ரூ .200 கோடிக்கு முதலீடு செய்த சூர்யா. கார்த்தி

புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் சூர்யா. இவரைப் பற்றிய முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர்  சூர்யா. இவர்  நேருக்கு நேர்,  கஜினி,  காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், சிங்கம் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் சூர்யா.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான  ஜெய்பீம், சூரரைப் போற்று,  எதற்கும் துணிந்தவன் என்ற படங்களும் ஹிட் ஆனது.தற்போது வாடிவாசல், வணங்கான், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சூர்யா தான் நடித்து சம்பாதித்த பெரும்பாலான பணத்தை மும்பையில் உள்ள நிறுவனத்தின் மூலம் முலம் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.200 கோடி எனவும், இதற்காக அவருக்கு மாதம் ரூ.20 கோடி வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், கார்த்தியும் இதில் முதலீடு செய்துள்ளதாகவும், இவருக்கும் மாதம் ரூ.5 கோடி வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
சூர்யா சினிமாவுக்கு வரும் முன்பே எக்ஸ்போர்ட் நிறுவனம்  நடத்தியவர் ஆவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்