தொடர் தோல்விகளால் விஷால் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (14:57 IST)
நடிகர் விஷால் இனிமேல் சொந்தமாக படங்கள் தயாரிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர். அவரின் படங்களுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலமாக படங்களை தயாரித்து வந்தார்.

ஆனால் அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் பெருமளவில் நஷ்டத்துக்கு ஆளாகி பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டார். இதனால் இன்னும் கொஞ்சம் காலத்துக்கு சொந்தப்படம் எடுக்காமல் மற்றக் கம்பெனிகளுக்கு நடித்துக் கொடுத்து கல்லா கட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்