வெற்றிமாறனின் படங்கள் போல ஆழமான படங்கள் இயக்க ஆசை… வெங்கட்பிரபு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:42 IST)
மாநாடு படம் தந்த வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். இதனால் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய எதிர்கால படைப்புகள் குறித்து பேசியுள்ளார். அதில் ‘என்னுடைய வருங்கால படங்களை இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் போல ஆழமான படைப்புகளாக உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அந்த படங்களும் என் பாணியில்தான் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்