லண்டனில் வடிவேலு படத்தின் படப்பிடிப்பு: வைரல் புகைப்படம்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (07:28 IST)
லண்டனில் வடிவேலு படத்தின் படப்பிடிப்பு: வைரல் புகைப்படம்!
வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
லண்டனில் வடிவேலு மற்றும் இயக்குநர் சுராஜ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனில் நடைபெற உள்ளதாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்