எனக்கு எதிராக சதி நடந்தது- முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (16:32 IST)
எனக்கு எதிராக சதி  நடந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைமை பயிற்சியாளர் ரவி  சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்தவர் ரவி சாஸ்திரி. இவர் இப்பொறுப்பில் இருந்த போது , ஒரு ஐசிசி தொடரை  கூட வெல்லவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்நிலையில், இவரை பயிற்சியாளர் பொறுப்பில்  இருந்த காலத்தில் தனக்கு எதிராக நடந்த சதி குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், எனக்கு பயிற்சியாளர் பொறுப்பு வந்தபோது,எனக்கு அப்பதவி வந்து விடக்குத்துடா து என்பதில் சிலர் குறியாக இருந்தனர் எனவும்  தனக்கு எதிரான சிலர் திட்டமிட்டு வேலை பார்த்ததை அவர் தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவி பொறுப்பு வகித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்