வாழை படம் திரையரங்குகள் மூலமாக சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?.. இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் இதுதான்!

vinoth
வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:23 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது. இதையடுத்து சமீபத்தில் படக்குழிவினர் 25 ஆவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடினர்.

இந்நிலையில் இப்போது வாழை கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க ஓட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் மூலமாக வாழை திரைப்படம் 33 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் செய்து இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்