வாழை படத்தின் க்ளைமேக்ஸில் அந்த டீச்சர் என்ன ஆனார்?... இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்த பதில்!

vinoth

செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (08:33 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது. இதையடுத்து சமீபத்தில் படக்குழிவினர் 25 ஆவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடினர்.

அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “படத்தின் இறுதியில் அந்த டீச்சர் என்ன ஆனார் என சிலர் கேட்கிறார்கள். உண்மையை சொல்லவேண்டுமென்றால் க்ளைமேக்ஸ் பாடல் காட்சியில் சிவனைந்தன் அவன் அம்மாவின் மடியில் படுத்திருப்பதற்குப் பதிலாக டீச்சரின் மடியில் படுத்திருப்பது போலதான் வைத்திருந்தோம். ஆனால் டீச்சரி தேதி (நிகிலா விமலின்) கிடைக்காததால் அந்த காட்சியைப் படமாக்க முடியவில்லை. அந்தக் காட்சியை நான் எடுத்திருந்தால் இப்போது சிலர் வைக்கும் மோசமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அமைந்திருக்கும். அந்தக் காட்சியை எடுக்காமல் விட்டதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்