அரண்மனை 4 பிரம்மாண்ட வெற்றியால் சுந்தர் சி எடுத்த முடிவு.. கலகலப்பு 3 ஷூட்டிங் தள்ளிவைப்பு!

vinoth

செவ்வாய், 28 மே 2024 (11:23 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் அந்த படம் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்து அவர்  கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த மாத இறுதியில் ஷூட்டிங்கை தொடங்க இருந்த நிலையில் இப்போது அரண்மனை 4 படத்தின் இமாலய வெற்றியால் கலகலப்பு 3 மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால் திரைக்கதையை இன்னும் மெருகேற்றலாம் என்ற முடிவை சுந்தர் சி எடுத்துள்ளாராம். அதனால் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்