கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

vinoth

சனி, 19 ஏப்ரல் 2025 (11:15 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுந்தர் சி ஒரு வெற்றிகரமான இயக்குனராக உள்ளார். கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான், அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர்  இயக்கிய ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தற்போது நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வரும் சுந்தர் சி அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இருவரும் இது சம்மந்தமாக சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இந்த படத்தை கார்த்தியின் நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படும் நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் ‘காஷ்மோரா’ படத்துக்குப் பின்னர் கார்த்தி மற்றும் நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்