கணவர் கைதில் தன்னை தவறாக சித்தரித்த ஊடகங்கள்… ஷில்பா ஷெட்டி வழக்கு!

வெள்ளி, 30 ஜூலை 2021 (10:22 IST)
ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர்

ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர். ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பாவுக்க்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் தனது கணவர் ராஜ் குந்த்ராவை கடுமையாக தாக்கியதாக போலீஸ் அதிகாரியின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஷில்பா ஷெட்டி இந்த விவகாரத்தில் தன்னை தவறாக சித்தரித்ததாக 29 பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்