ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று விசாரணை!

செவ்வாய், 27 ஜூலை 2021 (11:19 IST)
ஆபாச பட வழக்கில் சிக்கி நீதிமன்றக் காவலில் இருக்கும் ராஜ் குந்த்ரா மீதான வழக்கு விசாரணை இன்று வர உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.அந்த காவல் இன்றோடு முடியும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட காவல் இன்றோடு முடியும் நிலையில் அவரின் ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது காவல் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்