பிரபல இசை நிறுவனத்தின் மேல் அதிருப்தியில் சந்தோஷ் நாராயணன்… என்ன காரணம்?

vinoth

வியாழன், 23 அக்டோபர் 2025 (11:25 IST)
தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்ப செண்டிமெண்ட் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘தலைவன் தலைவி’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகி வசூலை வாரிக் குவித்தது. மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

இந்த படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி இந்த ஆண்டின் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவர் இசையில் உருவாகி இருந்த ‘பொட்டல மிட்டாயே’ என்ற பாடல் வைரல் ஹிட்டானது. ஆனால் படத்தின் மற்ற பாடல்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை.

அதற்குப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல இசை நிறுவனம்தான் காரணம் என்று சந்தோஷ் நாராயணன் நினைக்கிறாராம். ஏனென்றால் அப்போது வெளியான மற்றொரு இளம் இசையமைப்பாளரின் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு தலைவன் தலைவி பாடல்களை விளம்பரமேப் படுத்தவில்லை என அவர் அதிருப்தியில் உள்ளாராம். இதனால் இனிமேல் அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்களை சம்மந்தப்பட்ட இசை நிறுவனத்துக்குக் கொடுப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்