தனுஷ் அருண் மாதேஸ்வரன் படத்தில் இணைந்த சந்தோஷ் நாராயணன்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:15 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த வாரம் ரிலீஸாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.

இது சம்மந்தமாக தனுஷ் வெளியிட்ட டிவீட்டில் அதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வட சென்னை, ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் தனுஷோடு இணைந்து சந்தொஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்