இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்- ஆதிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் எப்படியாவது எஸ் ஜே சூர்யாவை நடிக்கவைக்க வேண்டுமென ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக எஸ் ஜே சூர்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.