வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த ராஜேஷ், கடந்த சில ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில், தானே கட்டிய தனிப்பட்ட கல்லறை இடத்தில் தான் ஒருநாள் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன், அதனை பராமரித்து வந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அவரது உடல் அந்த கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் சினிமா உலகினரின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக அவரது மகள் கதறி அழுததாக கூறப்படுகிறது. இந்த நல்லடக்க நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள், அவரது திரைப்படங்களை நினைவுகூர்ந்து வருத்தத்தில் மூழ்கினர்.
ஒரு காலத்தில் மெல்லிய குரலும் நுட்பமான நடிப்பாலும் தனித்துவம் பெற்ற ராஜேஷ், 1980களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் சாதித்தவர்.
தனக்கென கட்டிய ஓய்விடம் போல, அவர் காத்திருந்த அந்த அமைதிக்கான இடமும், இன்று அவரது இறுதி ஓய்விடமாக மாறியது.