மீண்டும் கேர்ள்பிரண்ட் படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா!

புதன், 6 டிசம்பர் 2023 (11:17 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இப்போது அவர் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது அனிமல் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளை முடித்துள்ள ராஷ்மிகா மீண்டும் கேர்ள் பிரண்ட் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இப்போது 20 நாட்கள் அந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்