பொன்னியின் செல்வன் படத்துக்குப் பின் மணிரத்னம் இயக்கும் படம்… நடிக்க போவது இவர்தான்?

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (15:56 IST)
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ரஜினி தரப்பில் இதற்கான முன்னெடுப்பை ரஜினிகாந்தின் மனைவி லதா, மணிரத்னம் மனைவி சுஹாசினி மூலமாக நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக மணிரத்னம் சொன்ன ஒன்லைன் ரஜினிக்கும் பிடித்திருப்பதாகவும் அதனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு இந்த படம் தொடங்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்