ஏன் திடீரென தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் ஹிட்டடிக்கின்றன? ராஜமௌலியின் செம்ம பதில்!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (12:59 IST)
இயக்குனர் ராஜமௌலி சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெறுவது குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக பாகுபலி, புஷ்பா மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற ஆக்‌ஷன் மசாலா தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெறுவது குறித்து அவர் பேசியுள்ளார். அதில் ‘நீங்கள் தொடர்ந்து இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது உங்களுக்கு காரமாக ஏதாவது கொடுத்தால் ரொம்பவும் பிடித்துவிடும். அதுபோல பாலிவுட் பல ஆண்டுகளாக பீல்குட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்துள்ளது. இப்போது பக்காவான கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களை நாம் கொடுக்கும் போது அவர்களுக்கு மிகவும் பிடித்து விடுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்