ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:57 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாப்ய் நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இப்போது இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளில் ராஜமௌலி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட்  9 ஆம் தேதி அவர்கள் இணையும் புதிய படத்தின் பூஜை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளது.

மகேஷ் பாபு தற்போது குண்டூர் கிராமம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்