அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட ஓவியா!

வியாழன், 29 ஜூலை 2021 (15:26 IST)
நடிகை ஓவியா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியதே வீட்டுக்குள் இருந்த ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரின் காதல்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவை ஆரவ் விலக்க மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா பாதியிலேயே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் ஓவியாவை பிரபலமாக்கியதே பிக்பாஸ்தான். ஆனால் அந்த பிரபலத்தின் மூலம் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்னர் சமூகவலைதளத்தில் அவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்