யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதேயில்லை- நடிகர் சூர்யா, ஜூனியர் என்.டி.ஆர் இரங்கல்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (19:08 IST)
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''அவருடன் பணியாற்றிய,    பேசிப் பழகிய  சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை; யார் என்ன          கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதேயில்லை. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து, புரட்சிக் கலைஞராக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்க''ல் என்று தெரிவித்துள்ளார்.
 
தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ''விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும்,  ஒரு உண்மையான ஆளுமை; அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்'' என்று தெர்வித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்