விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத பிரேமலதா.. சாலிகிராமம் இல்லத்தில் உடல்..!

வியாழன், 28 டிசம்பர் 2023 (11:10 IST)
விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக இன்று காலையில் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் விஜயகாந்தின் உடலை பார்த்து  பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைத்தது.
 
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்து கண்ணீருடன் விஜயகாந்த் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு விஜயகாந்தின் உடல் செல்லப்படவுள்ளது. இன்றும், நாளையும் அவரது உடல் பொதுமக்கள், கட்சியினர் மரியாதைக்காக வைக்கப்பட உள்ளது என்றும், நாளை இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,
 
 மேலும்  விஜயகாந்தின் உடலை சென்னையிலேயே அடக்கம் செய்வதா? அல்லது சொந்த ஊர் கொண்டு செல்வதால் என்பது குறித்து ஆலோசனையில் விஜயகாந்த் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்