என் பயோக்கில் நீரஜ் சோப்ரா நடிக்கலாம் . ரஜினி பட வில்லன் கிண்டல்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (23:03 IST)
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவில் பயோபிகில் நடிப்பது பற்றி பிரபல நடிகர் கிண்டலடித்துள்ளார்.

 
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனை நீரஜ் சோப்ராவால் இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா  ஒலிம்பிக் அதெலெட்டிக்கில் முதல் தங்கம் வென்று சாதித்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் 65 ஆம் இடத்திலிருந்து 47 வது இடத்திற்கு முன்னேறியது.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறியுள்ளதாவது: ஈட்டில் எறிதலில் 90.57 மீட்டர் தூரம் வீசி முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடிக்க நினைத்தேன். இருப்பினும் என்னுடைய சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். ஆனால் இலக்கை அடையவில்லை. விரைவில் அந்த இலக்கை அடைவேன் என நம்பிக்கையுடன்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் குறித்த மீம்ஸ் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அக்‌ஷய்குமார் கூறியுள்ளதாவது:  நீரஜ் சோப்ரா பார்க்க அழகாக இருக்கிறார். எனது வாழ்க்கை வரலாற்று சினிமாவாக எடுக்கபட்டால் அவர் நடிக்கலாம் என கிண்டாலக் கூறியுள்ளார்.  இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்