மகேஷ்பாபுவின் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக நதியா நடிக்கவிருப்பதாக நேற்று செய்தி பரவியது. அதனை நாமும் வெளியிட்டிருந்தோம். ஆனால், இந்த தகவல் பிழையானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முருகதாஸ் தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகி. இதில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நதியா நடிக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், அதில் உண்மையில்லை என்று முருகதாஸ் தரப்பு மறுத்துள்ளது. நதியாவை அவர்கள் அணுகவில்லை என்றும் கூறப்படுகிறது.