என் சினிமா வாழ்க்கையில் நான் அப்படி நடித்ததில்லை… குடும்பத்தினர் என்ன சொல்லப் போகிறார்களோ?- நாகார்ஜுனா!

vinoth

புதன், 23 ஜூலை 2025 (13:31 IST)
ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக ‘கூலி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்துள்ளார். படம் பற்றி பல தகவல்களை அவர் தன்னுடைய நேர்காணல்களில் பகிர்ந்து வருகிறார். அப்படி ஒரு நேர்காணலில் “நான் என்னுடைய நாற்பது வருட சினிமா வாழ்க்கையில் இவ்வளவு கெட்டவார்த்தைகள் பேசி நடித்ததில்லை. கூலி படத்தில் நிறையக் கெட்டவார்த்தைகள் பேசி நடித்திருக்கிறேன். அதைப் பார்த்து என் குடும்பத்தினர் எப்படி எதிர்வினை ஆற்றப் போகிறார்கள் என அறிய ஆவலாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்