சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. பராசக்தி திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் சோதனையிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் பராசக்தி திரைப்படம் முடக்கப்படலாம் என சொல்லப்பட்டது.
ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது இதன் ஷூட்டிங் பொள்ளாச்சியில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ராணா இருக்கும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதன் மூலம் இந்த படத்தில் அவர் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது சம்மந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.