மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா கார்த்தி? லேட்டஸ்ட் தகவல்!

vinoth

வெள்ளி, 8 மார்ச் 2024 (12:23 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது வாழை என்றொரு படத்தை இயக்கி வரும் அவர் இயக்கத்தில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார்.

இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் துருவ் விக்ரம் படத்தை முடித்த பின்னர் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை கார்த்தியை வைத்து தேவ் மற்றும் சர்தார் ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மாரி செல்வராஜ்- ரஜினி கூட்டணியில் உருவாக இருந்த படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்