இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் கார்த்தி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்தாண்டு தொடங்கி 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாபி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை மாளவிகா மறுத்துள்ளார். அதில் “நான் பாபி இயக்கும் மெஹா 158 படத்தில் நான் நடிப்பதாக செய்திகள் உலாவருகின்றன. சிரஞ்சீவி சாருடன் இணைந்து நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.