தமிழ் சினிமாவில் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்த உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய கூலி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இது பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மாலை நேரத்து மயக்கம், இறவாக்காலம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.