சைலண்ட்: நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் மாதவன் - அனுஷ்கா!

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (19:25 IST)
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு பல நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருந்தவர் அனுஷ்கா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகமதி ஆகிய படங்கள் அனுஷ்காவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
 
இதனையடுத்து பல கதைகள் கேட்டும் அவருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததுள்ளது. 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் தில்லர் படமான சைலன்ட் என தலைப்பிட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வசனங்களே இல்லாத பேசும் படமாக இது உருவாகிறது. 
 
இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோணா வெங்கட் ஸ்கிரிப்ட் எழுதி தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்