லைகா தயாரிப்பில் ஜெய் & ராஜ்கிரண் – சுசீந்தரனோடு மூன்றாவது முறை கூட்டணி!

புதன், 26 ஜனவரி 2022 (16:07 IST)
சுசீந்தரன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க உள்ள நிலையில் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் படத்தை திட்டமிட்ட படி இயக்கும் முடிக்கும் இயக்குனர்களில் சுசீந்தரனும் ஒருவர். கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட மூன்று படங்களை இயக்கி கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே ஜெய்யை வைத்து அவர் இரண்டு படங்களை இயக்கி முடித்து  இன்னும் ரிலிஸ் செய்யாமல் உள்ளார். ஆனால் அவரோடு இப்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இப்போது லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்