10 படமெல்லாம் இல்லை… எத்தனை படம் வேண்டுமானாலும் இயக்குவேன் – முடிவை மாற்றிக் கொண்ட லோகேஷ்!

vinoth

திங்கள், 12 மே 2025 (07:30 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கிய அவர், அதன் பின்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு ஒரு நேர்காணலில் லோகேஷ் ‘என்னுடைய திரை வாழ்க்கையில் 10 படங்களை மட்டும் இயக்கிவிட்டு அதன் பின்னர் ஓய்வு பெற்றுவிடுவேன்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “நான் அப்படி சொன்னபோது ஒரு மூத்த இயக்குனர் என்னிடம் ‘சினிமாவில் உள்ளே வருவதும் ஓய்வு பெறுவதும் நம் கையில் இல்லை. அதனால் எத்தனை படங்களை இயக்க முடியுமோ, அத்தனைப் படங்களை இயக்கவேண்டும்’ என்றார். எனவே எத்தனைப் படங்கள் வருகிறதோ அத்தனை படங்கள் இயக்கலாம் என்றிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்