அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

Siva

வெள்ளி, 27 ஜூன் 2025 (18:55 IST)
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதுதான் இன்னும் முடிவாகவில்லை. முதலில், இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டாலும், பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சூழலில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் கதை விவாதத்தை தொடங்கியுள்ளார். இந்த ஆரம்பகட்ட செலவுகளுக்கான நிதியை அஜித் தன் கையிலிருந்தே கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல, இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்யவும், அவருக்கான அட்வான்ஸ் தொகையையும் அஜித் தன் சொந்த நிதியிலிருந்தே வழங்கியுள்ளாராம்.
 
படத்தின் ஆரம்பகட்ட செலவுகளை அஜித்தே ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது, அவரே இந்த படத்தைத் தயாரிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர் உறுதி செய்யப்படும் வரை அஜித் இந்த பணத்தைச் செலவழிக்க இருப்பதாகவும், தயாரிப்பாளர் கிடைத்தவுடன் இந்த பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
 
ஆகவே, அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகும் வரை, படத்திற்கான ஆரம்பகட்ட செலவுகள் எவ்வளவு ஆனாலும், தானே ஏற்றுக்கொள்வதாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் இந்த நடவடிக்கை கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்