தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் மார்ஷல் ஆர்ட்ஸ் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் இயக்குனராக பல படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில் எப்போது இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.